Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை

ஜுலை 29, 2021 04:34

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம்  அருகே கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிரேசியா (வயது 20). இவருக்கு கார்த்திக் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

கார்த்திக் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற கார்த்திக் வழக்கம்போல மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் கிரேசியா துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கினார். 

அதிர்ச்சிஅடைந்த கார்த்திக் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிரேசியாவை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் கிரேசியாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கிரேசியா திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரண  நடத்தி வருகின்றனர்.திருமணமாகி2 ஆண்டுகளே  ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

தலைப்புச்செய்திகள்