![](admin/uploads/.5cf376c03656f9.41133699.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுக்கூர்: மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஜெனிதா (வயது 20). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெனிதா நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜெனிதா இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து ஜெனிதாவின் தாய்மாமன் கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.