Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் ரஷித்அலி. இவர் படியூர் பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். நேற்றிரவு பணி முடிந்ததும் தொழிலாளர்கள் நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றனர்.
இன்று அதிகாலை நிறுவனத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த அட்டைப்பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.இதனைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2மணி நேரத்திற்கு போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் பல லட்சம் மதிப்புள்ள அட்டை பெட்டிகள் தீயில் எரிந்து நாசமாகின.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று காங்கயேம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.