![](admin/uploads/.5c6d0616c6f0b8.79972448.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் சுகாதாரத்துறை கொரோனா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வருகிற 15-ந் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி திருவிழா மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தகவலை புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் அருண் தெரிவித்தார்.