![](admin/uploads/.5cecc718bce1f6.53858231.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கே.எம்.அப்துல் முத்தலிப் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்து விட்டார். என்ற செய்தி கேட்டும், குடவாசல் தெற்கு ஒன்றியம், பருத்தியூர் ஊராட்சியைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு குமார், தேர்தல் தகராறு முன்விரோதம் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும் ஆற்றொணாத் துயரம் அடைந்தோம்.
அன்பு சகோதரர்கள் அப்துல் முத்தலிப், குமார் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணம் அடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.