![](admin/uploads/.63f4af92ac7922.67982929.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். முலாயம் சிங் யாதவின் மகனும், சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.