![](admin/uploads/.5f5f3c0c963fd1.71304172.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சி.பி.எஸ்.இ. நிர்வாக ரீதியாக 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவு ஆகிய பகுதிகளில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சென்னை மண்டலத்தின் கீழ் இருக்கின்றன.
இந்த 16 மண்டலங்களில் திருவனந்தபுரம் 99.99 சதவீதம் பெற்று முதல் இடத்தை தக்கவைத்து இருக்கிறது. ஏற்கனவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் திருவனந்தபுரம்தான் முதலிடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து 99.96 சதவீத தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் 2-வது இடத்தை பெற்றுள்ளது. சென்னை மண்டலம் 99.94 சதவீத தேர்ச்சியுடன் 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது.