![](admin/uploads/.604377dc67a6f7.57894345.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நல்லம்பள்ளி: தொப்பூர் சோதனைச்சாவடி, புதூர், வெள்ளக்கல், தொம்பரகாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள டீக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தொப்பூர் போலீசார் சோதனை செய்தனர். அப்போது தம்பிதுரை (வயது 36), செந்தில்குமார் (38), சுரேஷ் (39), முனிவேல் (31) ஆகிய 4 பேர் தங்களது மளிகை கடைகளில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.