Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வல்லம்: திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ராஜா (வயது 39). இவர் சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் சேத்பட்டை சேர்ந்த ஸ்டாலின் (39) என்பவருடன் செஞ்சி வழியாக சேத்பட் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஸ்டாலின் ஓட்டினார். மேல்மலையனூரை அடுத்த வளத்தி அருகே உள்ள வடவெட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்டாலினின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.
விபத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த ராஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஸ்டாலின் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டாலினை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.