Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3வது அலை தாக்கும் அறிகுறி தென்படவில்லை- மருத்துவ நிபுணர் தகவல்

ஆகஸ்டு 06, 2021 03:13

புதுடெல்லி: கொரோனா 2-வது அலை இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்ததாக 3-வது அலை தாக்கப்போவதாக நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். இந்த மாதத்திலேயே அதன் தாக்கத்தை தொடங்கலாம் என்று கூறினார்கள். ஆனால் 3-வது அலை தொடங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை என்று பொதுசுகாதார மருத்துவ நிபுணரும் ஒருங்கிணைந்த உயிரியல் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குனருமான டாக்டர் அனுராக் அகர்வால் கூறினார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது:

டெல்டா வைரஸ் காரணமாக இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டது. 2-வது அலை பல மாநிலங்களில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் தாமதமாக 2-வது அலை தொடங்கியது. கேரளாவிலும் சில மாநிலங்களிலும் 2-வது அலை தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. 3-வது அலை தாக்குவதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.

2-வது அலை இன்னும் தொடர்ந்து நீடிக்கலாம். அது இன்னும் பல பகுதிகளில் தாக்குதலை தொடங்கவே இல்லை. அது மேலும் உயர்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். ஒரு வேளை 3-வது அலை உருவாகினால் ஏற்கனவே தாக்கிய முதல் இரண்டு அலைகளையும் விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதிக மருத்துவ வசதிகள் தேவைப்படலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்