Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருப்பூர் முதலிடம்

ஏப்ரல் 29, 2019 05:12

2019ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.   இதில், திருப்பூர் மாவட்டம் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், மாணவிகள் மற்றும் மாணவர்கள் என மொத்தமாக 95.02% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சியில் 3.7%  பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.   மாணவிகள் 97% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மாணவர்கள் 93.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  

மாவட்டங்கள் வாரியாக திருப்பூர்  98.53% கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தப்படியாக இராமநாதபுரம் 98.48% கொண்டு இரண்டாம் இடத்திலும் நாமக்கல் 98.45% கொண்டு மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

தலைப்புச்செய்திகள்