Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரை சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் என்ற சிக்கா (வயது 44). இவர் “சிக்கா மீடியா” என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். மேலும் ரவுடிபேபி சூர்யாவுடன் சேர்ந்து ஏராளமான டிக்-டாக் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இதில் அவர்கள் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்தது.
சென்னையை சேர்ந்த சூர்யாதேவி என்பவரும் தனது பெயரில் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்கள் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். நடிகை வனிதா விஜயகுமாரின் திருமணம் பற்றி சூர்யாதேவி வெளியிட்ட கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து வனிதா புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சிக்கந்தர் -சூர்யாதேவி இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரசரமாக கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.சம்பவத்தன்று சிக்கந்தர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது வீட்டு வாசலில் சூர்யாதேவி உள்ளிட்ட 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் சிக்கந்தரிடம் திடீர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சூர்யாதேவி, சக நண்பர் ஒருவருடன் சேர்ந்து சிக்கந்தரை செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். பதிலுக்கு சிக்கந்தரும் செருப்பை தூக்கி வீசினார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலை தளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிக்கந்தர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கதிர்வேல் டிக்-டாக் பிரபலமான சூரியாதேவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் செருப்படி வாங்கிய சிக்கா என்ற சிக்கந்தர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பெண்ணிடம் அடி வாங்கியதில் அவமானப்பட்டதாகவும், தனது தாய்க்கு துணையாக இருப்பதால் அவமானத்தை பொருத்துக் கொண்டு உயிரோடு இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.