Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4ம் நாள் முடிவில் இந்தியா 52/1 - இறுதி நாளில் வெற்றி பெற 157 ரன்கள் தேவை

ஆகஸ்டு 08, 2021 10:58

நாட்டிங்காம்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 84 ரன், ரவீந்திர ஜடேஜா 56 ரன் எடுத்து அவுட்டாகினர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 28 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 25 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்னும், டாம் சிப்லி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பொறுமையாக ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 32 ரன்னும், பேர்ஸ்டோவ் 30 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், ஷர்துல் தாகுர் தலா 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில் கே எல் ராகுல் 26 ரன்னில் வெளியேறினார். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 12 ரன்னும், புஜாரா 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இறுதி நாளில் 157 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்