![](admin/uploads/.5ed0b095ed02c0.73255254.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பதி காவல் கண்காணிப்பாளர் அப்பல நாயுடு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடப்பா மாவட்டம், புலிசெர்லாவைச் சேர்ந்தவர் வீரபத்திரா. இவரது மனைவி கங்குலம்மா. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் தங்களின் 4 மாத ஆண் குழந்தையுடன் திருப்பதி, அலிபிரி பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவர்களின் குழந்தையை காணவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடினர். இதில் பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றதாக யாசகர் ஒருவர் தகவல் கொடுத்தார். விசாரணையில் அந்தப் பெண் மைசூருவை சேர்ந்த ஆஷா எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அலிபிரி போலீஸார் மைசூரு சென்று, அங்கு குழந்தையை விற்கத் தயாராக இருந்த ஆஷாவை கைது செய்து, குழந்தையை மீட்டனர். இரண்டே நாட்களில் போலீஸார் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.