![](admin/uploads/.6040d8094fb2a2.54332912.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பதி: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நர்ஸ் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே வார்டில் இருந்த ஒரு நோயாளியின் உதவியாளரான விஜயகுமார் என்பவர் நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்த மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் விஜயகுமாரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நர்சு போலீசில் புகார் செய்தார்.போலீசார் கொரோனா வார்டில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.