Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஜீயபுரம்: திருச்சி முக்கொம்பு அருகே உள்ள திண்டுக்கரை மேலத் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 34). இவர் பெரம்பலூரில் உள்ள டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பி திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கொடியாலம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த சாலை விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.