Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
உலக கோப்பை டி20க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருபவர் ரவி சாஸ்திரி. வயது மூப்பு காரணமாக இவர் விரைவில் அப்பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் ரவி சாஸ்திரி தனது ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதன்பிறகு தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, புது பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.