Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு... தாக்குதலுக்கு திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஆகஸ்டு 13, 2021 06:12

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை எல்லைப் பாதுகாப்பு படையினரை குறிவைத்து இரண்டு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், ராக்கெட் லாஞ்சர் மூலம் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். 

இரவு முழுவதும் நடைபெற்ற இந்த சண்டையில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்பு படை தரப்பில் ஒருவரும், பொதுமக்கள் தரப்பில் 2 பேரும் காயமடைந்துள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாவும், தற்போது பயங்கரவாதி கொல்லப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்