![](admin/uploads/.5f609a984df9b7.49019993.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பரங்குன்றம்: நேற்று, திருப்பரங்குன்றத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும், துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஐ.பெரியசாமி திருப்பரங்குன்றம் அதிமுக கோட்டை என கொக்கரிக்கின்றனர். வேட்பாளர் சரவணன் வழக்கின் மூலமாக அதிமுக கோட்டையை தகர்த்துவிட்டார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மே 23ம் தேதிக்கு பிறகு பாஜவில் இணைவதற்காகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றுள்ளார். மே 23ம் தேதிக்கு பிறகு தற்போதைய அமைச்சர்கள் எங்கு இருப்பார்கள் எனத் தெரியாது. தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமர வைப்போம்.