Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில் பாதுகாப்பு படைக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆகஸ்டு 14, 2021 05:29

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கோவில் பாதுகாப்புப் படைக்கு தகுதியான முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஐம்பொன் சிலைகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல்களைப் பாதுகாக்க கோவில் பாதுகாப்புப் படை என்ற தனிப்படை உள்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மிக முக்கிய கோவில்களில் 47 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.7,300 வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 53 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரகமான முன்னாள் படை வீரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5-வது தளத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் அணுகி எழுத்து மூலமான விருப்ப விண்ணப்பித்தை சமர்ப்பிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 0421-2971127 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்