Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னியாகுமரி காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா - எம்.பி விஜய் வசந்த் கொடியேற்றினார்

ஆகஸ்டு 16, 2021 10:34

கன்னியாகுமரி: நாகர்கோவில் வெட்டுர்னிமடம் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை மற்றும் குஞ்சன் நாடார் சிலைகளுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விஜய் வசந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவர் அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் தலைவர் முருகேசன் மற்றும் திவாகர் ஸ்ரீநிவாசன், மகேஷ் லாசர், தங்கம் நடேசன், அபிஜித், சேவியர், அந்தோணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய எம்.பி விஜய் வசந்த், 75-வது சுதந்திர தின விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதியில் மாவட்ட ஆட்சியர் மூலம் விருதுகள் பெற்ற அரசுத்துறை அதிகாரிகள், கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், போலீசார் மற்றும் செவிலியர்கள் மற்றும் ஏனைய துறைகளில் சிறப்பாக பணியாற்றி விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார். 
 

தலைப்புச்செய்திகள்