Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் 50 சதவீதத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது - சுகாதார மந்திரி

ஆகஸ்டு 17, 2021 10:44

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியான வீணா ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடப்பு 2021-ம் ஆண்டில் கேரளாவில் உள்ள 3.54 கோடி பேரில் 50.25 சதவீதம் பேருக்கு (1,77,88,931) கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதில் இருந்து 213 நாட்களில் இந்த சாதனை அளவு எட்டப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்