Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் வென்ற வீரர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

ஆகஸ்டு 31, 2021 10:19

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் ஒரே நாளில் இந்தியா 2 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஏர்ரைபிள் பிரிவில் வீராங்கனை அவனி லெகரா தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் வீரர் சுமித் அண்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் இவர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு சாதனைகள் படைக்க த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்