Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் பலி- மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஆகஸ்டு 31, 2021 03:35

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஒய்.பிரகாஷின் மகன் கருணாசாகர், பெங்களூரு அருகே நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கோர விபத்துக்கு தன் அன்பு மகனை பறிகொடுத்து இருக்கும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாசுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை.

அன்பு மகனை இழந்து தவிக்கும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்