![](admin/uploads/.5ee86a3f5db667.67475442.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என கடந்த ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. இதன்படி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வரும் போதிலும் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:
இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சில விவசாய நிலங்களில் மின் இணைப்புகளுடன் கெப்பாசிட்டர்கள் பொருத்தப்பட்டு வருவதற்கான அவசியம் என்ன என்பது தெரியவில்லை. மின் பயன்பாட்டை அறிந்து கொள்ள வேண்டி கெப்பாசிட்டர் பொருத்தப்பட்டு வருவதாக மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தடையற்ற மும்முனை மின்சாரம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் எதற்காக கெப்பாசிட்டர் பொருத்த வேண்டும்? ஏற்கனவே ‘தட்கல்’ முறையில் வாங்கிய மின் இணைப்புகளுக்கு இதேபோன்று கெப்பாசிட்டர் பொருத்தப்பட்டுள்ளன. இலவச மின்சாரம் ரத்து ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு வருகிறது என்றார்.