![](admin/uploads/.5ddfc4d38b3606.52582521.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மயிலம்: மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு ரவிசங்கர் (வயது 43), என்பவர் மேலாளராக உள்ளார். சம்பவத்தன்று அங்கு வந்த கூட்டேரிப்பட்டு அடுத்த சின்ன வளவனூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (29), என்பவர் ரவிசங்கரிடம் நன்கொடை கேட்டுள்ளார். அப்போது அவர் தர மறுத்ததால், அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதன் பின்னர் ரவிசங்கரை மகேஷ் தாக்கினார்.
இதுகுறித்து ரவிசங்கர் மயிலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேசை கைது செய்தனர்.