Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் 2-வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா

செப்டம்பர் 02, 2021 10:30

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,803-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 21,640 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு மேலும் 173 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.  கேரளாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 38 ஆயிரத்து 614- ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,961- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 912- ஆக உள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 18.76 சதவிகிதமாக உள்ளது. திரிசூர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்