![](admin/uploads/.5c99be1b6d82d9.61542903.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா 2வது பதக்கம் வென்றார்.
துப்பாக்கிச்சுடுதலில் ஏற்கனவே தங்கம் வென்ற நிலையில் அவனி லெகாரா வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினார். 50 மீ. ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து அவனி லெகாரா வெண்கலம் வென்றார். நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது.