Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமான நிலையத்தில், 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

மே 01, 2019 06:24

திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, இளையான்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி, கடலூரை சேர்ந்த முகமது ரியாஸ், புதுக்கோட்டையை சேர்ந்த சாபுபரலி ஆகியோர் கடத்தி வந்த சுமார் 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 957 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்