Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாகவி பாரதிக்கு பிரதமர் மோடி புகழாரம்

செப்டம்பர் 11, 2021 11:29

சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினத்தில் அவரது பெரும்புலமையை நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு தினம் இன்று. பிரதமர் மோடி அடிக்கடி பாரதியின் பாடல்களை மேற்கோள் காட்டி உரையாற்றுவது வழக்கம்.

அந்த வகையில் பாரதியாரின் நினைவு தினமான இன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு வாய்ந்த சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். இந்த நினைவு தினத்தில் அவரது பெரும்புலமையை நினைவு கூர்வோம். அவரது பெரும்புலமை, நாட்டுக்கு ஆற்றிய பன்முகப்பங்களிப்பை நினைவில் கொள்வோம். சமூகநீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளையும் இந்த நாளில் நினைவில் கொள்வோம்.

தலைப்புச்செய்திகள்