Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை திரும்பிய விஜயகாந்த்

செப்டம்பர் 11, 2021 06:30

ஆலந்தூர்: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்கள் சென்றனர். விஜயகாந்த் மனைவி பிரேமலதா இந்த மாதம் 3-ந் தேதி அதிகாலை துபாய் சென்றார். விஜயகாந்துக்கு துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் லண்டன் டாக்டர் ஒருவர் சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் குணமடைந்து மருத்துவமனையில் டிவி பார்த்து கொண்டிருப்பது மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுடன் அமர்ந்து இருப்பது போல் புகைப்படங்கள் வெளியாயின. இந்த நிலையில் விஜயகாந்த் அவருடைய மனைவி பிரேமலதாவுடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் கார் மூலம் வீட்டிற்கு சென்றனர்.

விஜயகாந்த் உடல் நலத்துடன் சென்னை திரும்பி இருப்பது அவரது கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்