Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் குறையும் கரோனா தொற்று: குணமடைவோர் தொடர்ந்து அதிகரிப்பு

செப்டம்பர் 12, 2021 11:40

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 28 ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 32 லட்சத்து 36ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 84ஆயிரத்து 921ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6ஆயிரத்து 595 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் வீதம் 1.16 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 24 லட்சத்து 9ஆயிரத்து 345 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.51ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 338 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 42 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 181 பேரும், மகாராஷ்டிராவில் 35 பேரும் உயிரிழந்தனர்.

நாட்டில் இதுவரை 54 கோடியே 18 லட்சத்து 5 ஆயிரத்து 829 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 லட்சத்து 30 ஆயிரத்து 125 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 73.82 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

தலைப்புச்செய்திகள்