Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி

செப்டம்பர் 15, 2021 01:29

சென்னை: 9 மாவட்டங்களுக்கான  ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு  ரூ.4000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2000 செலுத்தி மனு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்