Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

செப்டம்பர் 24, 2021 02:12

புதுடெல்லி : தமிழக கவர்னராக பதவியேற்ற பிறகு ஆர்.என்.ரவி முதல் முறையாக நேற்று டெல்லிக்கு சென்றார். பின்னர் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இதைப்போல துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரையும் அவர் சந்திப்பார் என கூறப்படுகிறது.

வழக்கமாக தமிழக கவர்னர் டெல்லிக்கு வரும்போது, தமிழக அரசின் இல்லத்தில் தங்குவது இயல்பு. ஆனால் ஆர்.என்.ரவி டெல்லியில் மத்திய அரசு தனக்கு ஏற்கனவே வழங்கி இருந்த இல்லத்தில் தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்