Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்- 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

செப்டம்பர் 26, 2021 05:37

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி அண்மையில் பதவியேற்றார். பஞ்சாபில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராகி இருப்பது இதுதான் முதல்முறை. இவர் சோனியா காந்தி குடும்பத்துக்கும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மிகவும் நெருக்கமானவர்.

இந்நிலையில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்