Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊழலையும், லஞ்சத்தையும் இரண்டறக் கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல்: தமிழிசை

மே 01, 2019 10:28

இன்று காலை தூத்துக்குடியில் மே தின பேரணி நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பேரணி முடிந்தபின் பேசிய அவர், மோடி காவலாளி இல்லை களவாணி, திமுகதான் மக்களின் காவலாளி எனக்கூறினார். இதற்கு பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில் இவ்வாறு கூறியுள்ளார். 

நாட்டின் பிரதமரை களவாணி என தரம்தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம் ஆட்சி அதிகாரத்தில் ஊழலையும்  லஞ்சத்தையும்  இரண்டறக்கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்கமட்டார்கள் மடியில் கணமிருப்பதால்தானே காவலாளி களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிகிறார்?

நாட்டின் பிரதமரை களவாணி என தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம் ஆட்சி அதிகாரத்தில் ஊழலையும், லஞ்சத்தையும் இரண்டறக் கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்கமட்டார்கள் மடியில் கணமிருப்பதால் தானே காவலாளி களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிகிறார்? 
 

 

தலைப்புச்செய்திகள்