Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமரியில் கடந்த 2 நாட்களில் மதுவிற்ற 53 பேர் கைது

அக்டோபர் 02, 2021 10:42

நாகர்கோவில்: காந்தி ஜெயந்தியொட்டி இன்று (சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இதனால் நேற்றும், நேற்று முன்தினமும் மது பிரியர்கள் அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். சிலர் மதுபாட்டில்களை வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தனர்.
 
இதனால் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, மதுவிற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினர். அதன்படி நாகர்கோவில் சப்-டிவிஷனில் 15 பேரும், கன்னியாகுமரி சப்-டிவிஷனில் 17 பேரும், குளச்சல் சப்-டிவிஷனில் 13 பேரும், தக்கலை சப்-டிவிஷனில் 8 பேரும் என மொத்தம் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்