Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். .

அக்டோபர் 12, 2021 10:34

முதுமலை புலிகள் காப்பகத்தில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் பிற நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இதனை தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிந்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

இங்குள்ள யானைகள் முகாமில் வளர்க்கப்படும் 28 வளர்ப்பு யானைகளுக்கு உணவளிப்பதை சுற்றுலாபயணிகள் குடும்பத்துடன் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

தலைப்புச்செய்திகள்