![](admin/uploads/.60ffb3f14ff8e3.73423054.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழகம் முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் நிலையை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம், அனுமதியின்றி செயல்படுவதாக கூறி, அதனை மூட அம்பத்தூர் தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை ரத்து செய்யக்கோரி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களின் தற்போதைய நிலை, அடிப்படை வசதிகள், நிர்வகிக்கும் நபர்கள் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் நடத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.