![](admin/uploads/.5eb8f41c7aac74.06959478.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் தலைமையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து இன்று (13.10.2021) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு,
தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு பணி அலுவலர், பொதுத்துறை செயலாளர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.