Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி : தேனி அஞ்சல் கோட்டம் சார்பில் அக்., 9 முதல் அக்., 16 வரை தேசிய அஞ்சல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தபால்தலை சேகரிப்பு தினத்தையொட்டி வீரபாண்டி தேனி கலை, அறிவியல் கல்லுாரியில் நேற்று தபால் தலை கண்காட்சி, ஆதார் சிறப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கனகராஜ், உதவி கோட்ட கண்காணிப்பாளர் கணபதி சுப்ரமணியன் முன்னிலையில் கல்லுாரி செயலர் கலைவாணி துவக்கி வைத்தார்.
ஏற்பாடுகளை வீரபாண்டி, அஞ்சலக அதிகாரி சர்மிளா தேவி, வணிக நிர்வாகி கார்த்திக் செய்திருந்தனர். கண்காட்சியில் அரிய வகை தபால் தலைகள் இடம்பெற்றிருந்தன.