Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வண்டலூரில் கோர விபத்து; காரும் காரும் நேருக்கு நேர் மோதல்

அக்டோபர் 16, 2021 01:51

வண்டலூர் மண்ணிவாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சொகுசு காரை மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த கோகுலன்வாசன் ஒட்டி வந்துள்ளார்.

அப்பொழுது வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து இறங்கி மணிவாக்கம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து  நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியதால் கார் தூக்கி வீசப்பட்டு எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. 

இதில் இரண்டு கார்களின் முன் பகுதிகள் சுக்குநூறாக நொறுங்கியது. குறிப்பாக அதிகாலையில் நடந்தது என்பதால் நேருக்கு நேர் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு கார் ஓட்டுனர்களும் கார் உள்ளேயே சிக்கி வலியால் துடித்த இவர்களை அந்த வழியாக வந்த வாகன ஒட்டிகள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதுமட்டுமில்லாமல் இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிய போது அந்த வழியே வந்த ஆட்டோவும் சுக்குநூறாக நொறுங்கியதால் டிரைவர் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்

முக்கிய ஜிஎஸ்டி சாலையில் விபத்து நடந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்