Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
போபால்; மத்திய பிரதேசத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் உள்ள பாண்டிவாடா கிராமத்தை சேர்ந்தவர் தனது மகளுடன் கான்ஹிவாடா வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றார். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தையானது சிறுமியை தாக்கியது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தந்தை, அங்குள்ள கம்புகளை கொண்டு சிறுத்தையை விரட்ட முயன்றார்.
ஆனால் சிறுத்தையானது அவரையும் தாக்கியது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக திரண்டு சிறுத்தையை விரட்டினர். இதில் சிறுத்தையால் காயமடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுத்தை தாக்கியதில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.