Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பானி புயல் எதிரொலி ஆந்திராவில் கனமழை

மே 02, 2019 05:45

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பொடுகுபடு என்ற கிராமத்தில் அதிக மழை பெய்து வருகிறது .இந்த மாநிலத்தில் கோதாவரி, விசாகப்பட்டினம் , விஜ்யநகரம் உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது .  இதனால் பேரிடர் மீட்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர் . அதனை தொடர்ந்து மக்கள் பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் . 
 
மத்திய அரசு முன்கூட்டியே நிதி உதவிகளை மாநில அரசுகளுக்கு அளித்து  பேரிடர் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . எனினும் தமிழகம் , ஒடிசா , உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநில ரயில்கள் இன்று  மற்றும் நாளை ரத்து செய்தது இந்திய ரயில்வே துறை.

தலைப்புச்செய்திகள்