Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பிற்கான நிறுவனத்தை பிகிகார்ட்.காம் துவக்கியுள்ளது

அக்டோபர் 22, 2021 01:05

திருப்பூர்: இந்தியாவின் முன்னணி மின் வர்த்தக மற்றும் நேரடி வர்த்தக நிறுவனமான பிகிகார்ட்.காம் திருப்பூர் மாவட்டத்தில் ஆடைகள் தயாரிப்பிற்கான சொந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளது இதனை பிகிகார்ட்.காம் நிர்வாக இயக்குனர் பாபி செம்மனூர் திறந்து வைத்தார். 

158 ஆண்டுகள் நம்பிக்கைக்குரிய பாரம்பரியத்தைக் கொண்டு இந்தியா குவைத் மலேசியா அமெரிக்கா ஆகிய நாடுகளில் பாபி குழும நிறுவனங்கள் இயங்கி வருகிறது தமிழகத்தில் திருப்பூரில் முதல்முறையாக ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை இன்று துவக்கி உள்ளது 300க்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

மேலும் ஆடைகள் தயாரிப்பிற்கான உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்