![](admin/uploads/.5de250d2ccc909.13445537.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி (வயது 88), கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து வெளியூர் பயணங்களை தவிர்த்து வந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காரில் சென்று வந்தார்.
கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ரெயில் மூலம் கோவை சென்றார். பின்னர், குன்னூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்பின்பு, ரெயில் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார்.
இந்தநிலையில் அவருக்கும், அவரது மனைவி மோகனாவுக்கும் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இருவரும் சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.