Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாட்ஸ் அப் சாட்டிங் மோகம்... தாய் பாலுக்காக அழுத குழந்தையை கொன்ற கொடூர தாய்

மே 02, 2019 09:41

கேரளா: கேரளா மாநிலம் சேர்த்தல பட்டினங்காடு கொல்லம் வெளி காலனியை சேர்ந்த ஷரோன், ஆதிரா, காதல் திருமணம் செய்த இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் 30-ம் தேதி இரவு திடீரென்று குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக கூறி தாய் ஆதிரா, வாயில் வயிற்றில் அடித்தப்படி கதறியது ஊரையும் கண்ணீர் வடிக்க வைத்தது. மேலும் குழந்தை இறந்து கிடந்த விதம் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடம்பில் எந்த காயமும் இல்லை மேலும் மூச்சு திணறிதான் குழந்தை இறந்ததாக கூறினார்கள். இது அக்குழந்தையிம் தாய் சொன்னதுக்கு எதிராக இருந்ததால் அவர் மீது சந்தேகம் வலுத்தது.

மேலும் இந்த விஷயம் போலீசாருக்கு போக தாய் ஆதிராவை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் இன்று அதிர்ச்சியான விஷயத்தை கூறினார் ஆதிரா. “இரவு 12.30 மணிக்கு நான் செல் ஃபோனில் வாட்ஸ் அப் மூலம் தோழியிடம் தகவல் பரிமாறி கொண்டு இருந்தேன். அப்போது குழந்தை பாலுக்கு அழுதது. கொஞ்ச நேரம் கழித்து பால் கொடுக்கலாம் என்று குழந்தையை தட்டி கொடுத்தேன். அது அழுகையை நிறுத்தாமல் இன்னும் சத்தமாக அழுதது.

உடனே நான் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை பொத்தினேன் பின்னர் வாயில் கையை பொத்தி வைத்தப்படி அப்படியே கவனம் இல்லாமல் வாட்ஸ் அப்பில் மூழ்கியிருந்ததால் குழந்தை இறந்து போனது” என்றார். இதையடுத்து போலீசார் ஆதிராவை கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்