![](admin/uploads/.5f6858e643ead5.67445421.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். ஜம்மு - காஷ்மீரில் அண்மை காலமாக வெளி மாநிலத்தவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளதால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஸ்ரீநகரில் ஹைடெர்போரா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். விசாரணையில் அவர் பர்ஸுளா பகுதியைச் சேர்ந்த வியாபாரி எனத் தெரிய வந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பெயா் விவரம் மற்றும் அவா் தொடா்புடைய இயக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.