Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியார் திடலில் நாளை கி.வீரமணியின் 89-வது பிறந்த நாள் விழா

டிசம்பர் 01, 2021 10:42

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நாளை (வியாழக்கிழமை) 89-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அவரது பிறந்தநாளை சுய மரியாதை நாளாக கொண்டாடுவதற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கி.வீரமணி பிறந்தநாள் விழா நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. 9.30 மணி முதல் 11 மணி வரை தோழர்கள் சந்திப்பு நடைபெறும். பிறகு திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலிப்பூங்குன்றன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி உரையாற்றுகிறார்கள். இதையடுத்து கி.வீரமணி எழுதிய 4 நூல்கள் வெளியிடப்படுகின்றன.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

அதன்பிறகு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஏற்புரை நிகழ்த்துகிறார். திராவிடர் மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் இணைப்புரையும், திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் இன்பக்கனி நன்றியுரையும் வழங்குகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்