Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில் பாம்பு கடித்து கல்லூரி மாணவி மரணம்

டிசம்பர் 01, 2021 05:28

தஞ்சாவூர்: தஞ்சை கரந்தை தைக்கால் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் நிஷாவர்ஷினி (வயது 17). இவர் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை இவர் தனது வீட்டின் பின்புறம் கோழியை அடைக்க சென்றார். அப்போது பாம்பு இவரை கடித்தது. இதில் வாயில் நுரை தள்ளியபடி நிஷாவர்ஷினி மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நிஷாவர்ஷினி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணிவண்ணன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்